Onsdag, 09 Maj 2012 09:09
மிழர் வரலாற்றில் நினைத்தாலே நெஞ்சம் கதறியழும் கொடூரமான நாள் மே 18. இந்நாளை நினைவுகூர்ந்து டென்மார்க் திசைகள் இளையோர் அமைப்பினரால் கயஉநடிழழம ஊடாக டென்மார்க் வாழ் அனைத்து மக்களுக்கும் போர்க்குற்ற நாளான மே 18 இல் எமது தாயக தேசத்தில் என்ன நடந்தது என்பதனைத் தெரியப் படுத்தும் நோக்கத்துடன் ”இலங்கைத்தீவில் நடாத்தப்படும் தமிழர் மீதான இனப்படுகொலையை நாம் கண்டிக்கின்றோம்” என்னும் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
பல்லாயிரக் கணக்கான நம் உறவுகளை ”முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில்” நாம் இழந்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில 2009ம் ஆண்டின் முதல் 5 மாதங்களிலும் சிறீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல கொடூரமான குற்றங்களில் சிலவற்றையே சுட்டிக் காட்டி இக் கவனயீர்ப்புப் போராட்டம் தொடரப்படவுள்ளது. ”தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்” ”தமிழ் மக்கள் மீது மேற்க்கொள்ளப்பட்ட கைதுகள் மற்றும் சித்திரவதைகள்” ”சர்வதேசஅளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்;” ”பசி மற்றும் மனிதாபிமானமற்ற வாழ்க்கைச் சு10ழ்நிலை” மற்றும் ”பொதுமக்களை இலக்குவைத்து நடாத்தப்பட்ட குண்டுவீச்சுக்கள்” ஆகிய குற்றங்களே இங்கு சுட்டிக் காட்டப்படுகின்றன.
டென்மார்க் வாழ் அனைத்து மக்களுக்கும் கடந்த 2009 ஆண்டு தமிழர் மீது தொடுக்கப்பட்ட இனப்படுகொலை பற்றித் தெரியப்படுத்தி நினைவுபடுத்தும் முகமாக திசைகள் இளையோர் அமைப்பு உறுப்பினர்களால் இக் கவனயீhப்பு போராட்டம் மே மாதம் 10ம் நாளிலிருந்து http://www.facebook.com/groups/66648005478/ , http://thisaigal.dk/ ஆகிய இணைய முகவரிகளில் பதிவேற்றப்படும். இக் கவனயீர்ப்புப் போராட்டத்தின் மூலம் அனைவராலும் தமிழினப்படுகொலை தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களைச் சென்றடையவேண்டும் சென்றடையும் என்ற நம்பிக்கையிலே கயஉநடிழழம கவனயீர்ப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
அத்துடன் கயஉநடிழழம- கவனயீர்ப்புப் போராட்டத்தை ”முள்ளிவாய்க்கால் படுகொலை” யில் உயிர் துறந்த எம் மக்களுக்கும் எம் மண்ணின் விடுதலைக்காய் விதையாகிய மாவீரர்களுக்கும் கண்ணீருடன் அர்ப்பணிக்கின்றோம்.
Read more
Add comment (0)
Hits: 71





Søndag d. 04/12-11 var omkring 300 tamilske børn i alderen 7-17 år mødt frem i tyve forskellige byer for at fremvise deres kunstneriske talenter til Thisaigals Kunstkonkurrence.
Søndag den 25. september afholdte Thisaigal studieorienteringsdag i Grindsted. Studieorienteringsdagen havde til formål at oplyse og vejlede unge tamilere og deres forældre om de uddannelsesmuligheder, der findes i Danmark og hjælpe dem til at træffe de uddannelsesmæssige valg, som de kommer til at stå overfor i deres fremtid.